சிம்பு தனது பேஸ்புக் இணையத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா -2' குறித்து விரைவில் தெரிவிக்கிறேன் என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் சிம்பு மீண்டும் கார்த்திக் பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், ஏமி ஜாக்சன் நாயகியாக நடிக்க இருப்பதாகவும், 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' நவம்பர் 2011 துவங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின.

இது குறித்து இன்று விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் "விண்ணைத்தாண்டி வருவாயா 2ம் பாகம் குறித்து இன்னும் எதுவும் முடிவாகவில்லை. நவம்பர் 2011 துவங்க இருப்பதாக வந்துள்ள செய்தி முற்றிலும் தவறானது. ஜுன் 2012ம் ஆண்டு ஒரு படத்திற்காக சிம்புவிடம் பேசி வருகிறேன்.

ஏமி ஜாக்சன் அப்படத்தில் இருப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. கதை, படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் யார் என்பது குறித்து இன்னும் எதுவும் முடிவாகவில்லை.

விண்ணைத்தாண்டி வருவாயா 2ம் பாகம்  ஒரு ஐடியா தானே தவிர இன்னும் அது குறித்து நான் முடிவு செய்யவில்லை. " என்று தெரிவித்துள்ளார்.



நன்றி : சினிமா விகடன் BETA

0 comments:

Post a Comment